![]() |
காமராஜர் |
விவரம் தெரிந்த நாள் முதல், கடைசி உயிர் மூச்சு வரை... நாடு, நாட்டு மக்கள் முன்னேற்றம் பற்றியே சிந்தித்த ஒரு தலைவர் உண்டென்றால், பெருந்தலைவர் காமராஜர் மட்டுமே. நல்ல உயரம், கருத்த உடல், கூர்மையான பார்வை. கம்பிரமான நடை, எளிமையான 4 முழு வேட்டி, யதார்த்தமான பேச்சு, கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு, 24 மணி நேரமும் ஏழை-எளிய மக்களை மேம்படுத்தவது எப்படி என்ற சிந்தனை-இத்தனை சிறப்புகளையும் கொண்ட ஒரு கலவையாகத் திகழ்ந்தார் காமராஜர்.
ஒரு சமுதாயம் விடுதலை பெறும் போதோ அல்லது அடிமைத் தளையில் இருந்து விடுபடும் போதோ, பொருளாதாரத்தை திருத்த நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது பொருளாதார வளர்ச்சி கிடைக்குமானால் அந்த சமுதாயம் மேம்படும். அந்த வகையில் தமிழக மக்களுக்கு மிகச் சரியான காலக் கட்டத்தில், சரியான பொருளாதார மறுமலர்ச்சியை காமராஜர் ஏற்படுத்திக் கொடுத்தார்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு அவதார பெருமகானாக வலம் வந்தார். நாட்டில் வறுமை,கஷ்டம் வரும் போது கடவுள் அவதாரம் எடுப்பார் என்று புராணங்களில் படித்திருக்கிறோம்.
காமராஜரும் அப்படி ஒரு அவதார பிறப்பு என்றே சொல்லலாம். வாடி, வதங்கிக் கிடந்த மக்கள் வாழ்வில் வளம் ஏற்படுத்திய அவர் அவதார பெருமகானாகக் கருதப்பட்ட காரணத்தால்தான் எல்லா தரப்பு மக்களும் அவரை “கண்கண்ட தெய்வம்" என்றனர். அவர் செய்த சாதனைகள், சமுதாய மாற்றங்களை ஒரு கண்ணோட்டமாக பார்த்தால், ஆச்சரியம் மட்டுமல்ல மிரட்சியும் கூட ஏற்படும்.
0 Comments